சவூதியில் தற்கொலை செய்து கொண்ட தமிழரின் உடல் ஜித்தா தமிழ் சங்க உதவியுடன் தமிழகம் வந்து சேர்ந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி சின்ன சூண்டி பகுதியைச் சேர்ந்த பரசுராமன், பொட்டு தம்பதியரின் மகன், ராஜ்குமார். 29 வயதான இவர், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் அவரது விசா முடிந்து விட்டதால் புதுப்பிக்க முடியாமல் மன உளைச்சளில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ராஜ்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இரண்டு மாதமாக ஊருக்கு உடலை கொண்டு வருவதற்கும் பல முயற்சி மேற்கொண்டு முடியவில்லை.
இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை அறிந்த ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் பேரரசு, சிராஜ் உள்ளிட்டவர்களின் முயற்சியால் ராஜ்குமாரின் உடல் நேற்று தமிழகம் அனுப்பி வைக்கப் பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.