அமெரிக்காவில் நாசாவின் விண்வெளி மையத்தின் பயிற்சியில் அதிராம்பட்டினம் பள்ளி மாணவர்கள்



அமெரிக்காவின் நாசாவின் விண்வெளி மையத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினத்திற்குட்பட்ட பகுதியில் உள்ளது புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி.

இங்கு பயிலும் 18 பேர் கல்விச் சுற்றுலாவாக அமெரிக்கவின் நாசா விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமையில் ஏழு நாள் சுற்றுலாவாக சென்ற இம்மாணவர்களுக்கு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்வெளி வீரர்களின் பயண பயிற்சி மற்றும் ராக்கெட் ஏவுதல் பயிற்சி வழங்கப்பட்டது.

இதில், விண்வெளி சோதனைகள், விண்வெளி வீரராவதற்கு அளிக்கப்படும் பயிற்சி, செயற்கைகோளை கட்டுப்படுத்தி இயக்குவது எப்படி? அது எப்படி இயக்கப்படுகிறது, மற்றும் ரோபோ தொழில்நுட்பம் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும், நிலவுக்கு சென்று வந்துள்ள அப்போலோ மற்றும் சடர்ன் வி ராக்கெட் ஆகியவற்றை நேரடியாகவும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

விண்வெளி வீரர்களோடு கலந்துரையாடல், ராக்கெட் மாதிரி செய்து பறக்கவிடும் நிகழ்ச்சி ஆகியவற்றிலும் இம்மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் மியாமி பல்கலைகழகத்திற்கும் இம்மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நாசாவிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments