திருச்சியில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திருத்தம் செய்யக் கோரி தர்ணா போராட்டம்!!



திருச்சி மாவட்ட அனைத்து கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திருத்தம் செய்யக்கோரி தர்ணா போராட்டம் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.


கூட்டமைப்பு  ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் மஜக-வின் சார்பாக பேராசிரியர் மைதீன், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.


மஜக மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஷா, அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

 இதில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, அவர்கள்  தலைமையில் மஜக வின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.


 இந்த தர்ணா போராட்டத்தில் பெண்கள் உட்பட திரளானோர் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தகவல்:
மஜக தகவல் தொழில் நுட்ப அணி
MJK_IT_WING
திருச்சி மாவட்டம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments