SP பட்டிணத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்..! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!



"இலங்கை தமிழகர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் விதமாக மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்ததத்தை  திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தி
  SP.பட்டிணம் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பில் காவல் நிலையம் அருகில் நேற்று 28.12.2019 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


SP பட்டிணம் ஜமாத் மற்றும் பொதுமக்கள் தலைமையில் சின்னப்பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


SP.பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கைகளில் தேசியக் கொடிகள் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளை ஏந்தி பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி முழங்கியபடி எதிர்ப்பு தெரிவித்தனர்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments