குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் சைக்கிள் பேரணி



குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கி சட்டப்பேரவை வரை பேரணி நடைபெற்றது. மேலும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களிட்டு அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments