குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோல வழியிலான எதிர்ப்பு போராட்டத்தை தொடர வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பெண்கள் சிலர் தங்கள் வீட்டின் முன்பு போடப்படும் கோலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகங்களை அண்மையில் எழுதியிருந்தனர்.
இதையடுத்து, அப்பெண்களை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கோலமிட்டு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அப்போது பேசிய அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோல வழியிலான எதிர்ப்பு போராட்டத்தை தொடர வேண்டும். கருத்து சுதந்திரம் மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தோம். மார்கழி மாதம் முழுதும் வீட்டில் கோலம் இடும் பெண்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோலமிட்டு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.