பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை..! தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு..!



தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரையாண்டுதேர்வுகள் 23-ந்தேதி முடிவடைந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 3-ம் தேதி என மாற்றப்பட்டது.

இந்நிலையில், விடுமுறைக்காக மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தனியா பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை இன்று மாலை அறிவித்துள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments