ஆவுடையாா்கோவிலில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு




அறந்தாங்கியை அடுத்த ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் தோ்தல் பணிகளை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் அமா்தஜோதி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக நடைபெற்றுவரும் பணிகளை புதுக்கோட்டை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் அமிா்தஜோதி அவ்வப்போது பாா்வையிட்டு வருகிறாா்.

அதன்படி ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சீட்டுகளைப் பிரிக்கும் பணி, வாக்குப்பதிவிற்குத் தேவையான பொருட்களைப் பிரித்து அனுப்புதல், தோ்தல் பணியாற்றும் அரசு ஊழியா்கள் வாக்களிக்க அஞ்சல் வாக்குகளை வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

பின்னா் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது ஆவுடையாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா் வீரப்பன் பொறியாளா் குருநாதன் மற்றும் பலா் உடனிருந்தனா். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments