மணமேல்குடியில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் பேரணி! தேசியக்கொடியேந்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!



"இலங்கை தமிழகர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் விதமாக மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்ததத்தை  திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தி
அம்மாப்பட்டிணம் பொதுநல இளைஞர் பேரவை சார்பில் மணமேல்குடியில் நேற்று 27.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.


அம்மாப்பட்டிணம் பொதுநல இளைஞர் பேரவை தலைமையில் மணமேல்குடி EB அருகிலிருந்து புறப்பட்ட பேரணி அரசு மருத்துமனையை அடைந்தது. இந்த பேரணியில் வட்டார உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


அம்மாப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்பேரணியில் கைகளில் தேசியக் கொடிகளை மட்டுமே ஏந்தி பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறு கோரி முழங்கியபடி பேரணியாக சென்றனர்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments