குவைத் நாட்டில் காணாமல் போனகணவரை மீட்க மனைவி கோரிக்கை



இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சேதுராஜபுரத்தை சேர்ந்த முத்துமாரி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது கணவர் 20 நாட்களுக்கும் மேல் குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதாகவும், அவரை மீட்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குழந்தையுடன் மனு அளிக்க வந்திருந்தார்.

அவர் கூறியதாவது:

எனக்கு 7 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். நான் சேதுராஜபுரத்தில் வசிக்கிறேன். வயதான மாமனார், மாமியார் என்னுடன் வசிக்கின்றனர். கணவர் ஐந்து ஆண்டுகளாக குவைத் நாட்டில் வீட்டில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவரது வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வருகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா வந்து செல்வார்.

கடந்தாண்டு வந்து சென்ற கணவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக புகார் செய்து புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு செல்வதாக தெரிவித்தார்.

வேலைகள் முடிந்த பின்பு அழைக்கிறேன் என்றவர் அதன் பின் தொடர்பு கொள்ளவில்லை. நான் அவருடைய அலைபேசிக்கு பல முறை தொடர்பு கொண்டேன். ஸ்விட்ச் ஆப் ஆகியதாக வந்தது. தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். ஆனால் பலனில்லை. எனது உறவினர்கள் மூலம் தேட சொன்னேன். அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

எனவே எனது கணவரை மீட்டுத்தர கலெக்டரிடம் மனு அளிக்க வந்துள்ளேன், என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments