கோபாலப்பட்டிணம் பொதுநல அமைப்புகள் மற்றும் ஜமாத்தார்களுக்கு அழைப்பு விடுத்த GPM TNTJ கிளை நிர்வாகிகள்..!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணத்தில் 26.12.2019 வியாழக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலபட்டிணம் கிளை சார்பாக
சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் அருகில் 28.12.2019 சனிக்கிழமை அன்று நடைபெறும் மதரியதாக பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கோபாலபட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றம் கழகம்,GPMமக்கள் மேடை, GPM பொதுநல சேவை, SDPI மற்றும் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து சென்னையில் 28.12.2019 நடைபெறக்கூடிய பேரணிக்கு கலந்து கொள்ளுமாறு கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலபட்டினம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்: அப்துல் ரசாக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments