நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் நாளை 26/01/2020 கோபாலப்பட்டிணத்தில்..!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் குடியரசு தினம் கிராமசபை கூட்டம் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில் உள்ள ஆலமரத்தடியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ரா. சீதாலெட்சுமி Msc.,BEd., தலைமையிலும், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி. கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள், திரு.பெ. ரமேஷ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அதுசமயம் கிராம சபை கூட்டத்தில் கோபாலப்பட்டிணம் மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும், சுய உதவி குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் இருக்கும் குறைகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
ரா. சீதாலெட்சுமி Msc.,BEd., ஊராட்சி மன்ற தலைவர்,
உதயம் அபுதாஹீர், துணைத்தலைவர்.

உறுப்பினர்கள்:
திருமதி.சித்தி நிஜாமியா, திரு.அபுதாஹீர், திருமதி.மும்தாஜ் பேகம், திருமதி.ராஜபு நிசா, திருமதி.பெனாசிா் பேகம், திரு.சாதிக்பாட்சா, திரு.அன்வர் பாட்சா, திருமதி.மல்லிகா, திருமதி.சிங்காாி, திரு.லத்திப், திருமதி.பிரேமா

மற்றும் 

D.மதி, ஊராட்சி மன்ற செயலர்,
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments