தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார்ப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருபவர் ஆசிவ் வயது ( 9 ) ஆசிவ் கண்ணைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு , அதில் பயிற்சியும் மேற்கொண்டு வந்துள்ளார் . அதற்கு அவரது பெற்றோரும் ஊக்கமளித்து வந்துள்ளனர். ஆசிவ் வீட்டிலேயே கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுவாராம்.
இந்நிலையில் , இன்று பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து பேராவூரணி சாலையில் கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டிக்கொண்டே சுமார் 35 கி . மீ வரை சென்றுள்ளார் . இந்த சாதனைக்கு 20 கி . மீ தூரம் வரையே இலக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிவ் 35 கி . மீ வரை பயணித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவரது சாதனைக்கு அங்கீகாரமாக , இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆசிவின் சாதனையைப் பதிவு செய்துள்ளது . ஆசிவுக்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.