சவுதி அரேபியா சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் கடந்த 12 வருடங்களாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானங்களை செய்து ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றது.
அதைத் தொடர்ந்து நடப்பாண்டிலும் (2019) பல்வேறு இரத்ததான முகாம்கள் நடைபெற்றது. இதில் 1141 குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறையின் அடிப்படையில் சுமார் 944 யூனிட்கள் (424.8 லிட்டர்கள்) இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மனித நேய சேவையைப் பாராட்டி கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனை இரத்த வங்கியின் பொறுப்பாளர் டாக்டர். இம்ரான் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ இ.பாரூக் அவர்களிடம் வழங்கினார்கள்.
இரத்த வங்கியின் பொறுப்பாளர் டாக்டர். இம்ரான் அவர்கள் கூறுகையில்:-
“மறுமை நன்மையை மட்டும் நாடி செய்யப்படும் இது போன்ற மனித நேயப் பணி பாராட்டுக்குரியது” என்றும், இந்த மனித நேயப் பணியினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகின்றது என தனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்தார்கள்.
இதனைப் போன்று சவுதி அரேபியா சுகாதாரத் துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் இதற்கு முன்பும் பெற்றுள்ளதுடன், நடப்பாண்டில் சிறந்த இரத்ததானத்திற்காக பெறும் இரண்டாவது பாராட்டுச் சான்றிதழ் இதுவாகும். கடந்த மாதம் கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் (சுமைஸி) மருத்துவமனையின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.