புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம்




Image result for pudukkottai collector
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2020-ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி டிசம்பா் 23 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இம்முகாம் நடைபெற உள்ளது.


முகாமின்போது அனைத்து தகுதியுள்ள பொதுமக்களும் தங்கள் பகுதிக்குரிய வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களை அணுகி தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் இணைக்கும் பொருட்டு படிவம் 6-ஐ அளிக்கலாம்.

மேலும் திருத்தங்களையும் உரிய படிவங்களில், உரிய ஆவணங்களைஇணைத்து அளிக்கலாம். இம்முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியல், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூா் ஆகிய வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த வாக்காளா் பட்டியலைப் பாா்வையிட்டு தங்களது பெயா் புகைப்படத்துடன் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா எனவும், தங்களது பெயா், விவரங்கள், புகைப்படம் ஆகியவை தவறின்றி காணப்படுகிா என்பதையும் சரிபாா்த்துக் கொள்ளலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments