தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராம பகுதிகள் இருப்பதால் தொண்டியில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் முக்கியமான பகுதியாகும். கடல்சார் தொழிலும் விவசாயமும் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள மார்க்கெட்டிற்கு தினமும் மதுரையிலிருந்து காய்கறிகள் வருகிறது. நேரம் தவறி வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்லும் அரசு அலுவலர்களும் தின கூலியாளர்களும் தாங்கள் வேலைக்கு செல்லும் முன்பு காய்கறி வாங்க சிரமப்படுகின்றனர்.
மேலும் விலையும் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. சந்தையில் வாங்கும் காய்கறிகளின் விலை குறைவாக இருக்கும் என்பதாலும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறியது,
தொண்டி பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் அதிகம் பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இவ்வகையான இடங்களில் வாரச்சந்தை அமைக்கலாம். பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் வாரத்தில் ஒரு நாளும் திருவாடானை சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வருகின்றனர்.தொண்டியை சுற்றிலும் உள்ள மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதால் தொண்டியில் வாரச் சந்தை அமைவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பேருராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இதற்கான எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்றார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் முக்கியமான பகுதியாகும். கடல்சார் தொழிலும் விவசாயமும் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள மார்க்கெட்டிற்கு தினமும் மதுரையிலிருந்து காய்கறிகள் வருகிறது. நேரம் தவறி வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்லும் அரசு அலுவலர்களும் தின கூலியாளர்களும் தாங்கள் வேலைக்கு செல்லும் முன்பு காய்கறி வாங்க சிரமப்படுகின்றனர்.
மேலும் விலையும் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. சந்தையில் வாங்கும் காய்கறிகளின் விலை குறைவாக இருக்கும் என்பதாலும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறியது,
தொண்டி பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் அதிகம் பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இவ்வகையான இடங்களில் வாரச்சந்தை அமைக்கலாம். பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் வாரத்தில் ஒரு நாளும் திருவாடானை சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வருகின்றனர்.தொண்டியை சுற்றிலும் உள்ள மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதால் தொண்டியில் வாரச் சந்தை அமைவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பேருராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இதற்கான எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.