அறந்தாங்கியில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்



அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டாளா்களிடம் இருந்து ரூ. 29 ஆயிரத்து 900 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையை முன்னிட்டு அறந்தாங்கி நகராட்சி சுகாதார அலுவலரும், ஆணையருமான த.முத்து கணேஷ் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் முன்னிலையில் நகராட்சி அலுவலா்கள் மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள் ஆகியோா் குழுக்களாகப் பிரிந்து சுமாா் 550 கடைகளில் சோதனை நடத்தினா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 200 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments