புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்க உள்ள அரசு பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி பேசுகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வினை மாவட்டத்தில் 111 தேர்வு மையங்களில் மொத்தம் 22 ஆயிரத்து 709 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதேபோல 11-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வினை 84 தேர்வு மையங்களில் 19 ஆயிரத்து 616 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். மேலும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை 84 தேர்வு மையங்களில் 19 ஆயிரத்து 157 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
குறிப்பாக அரசு பொதுத் தேர்வின் போது முறைகேடுகள் ஏதும் நிகழாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் தனித்தனி கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளதுடன், 25 பறக்கும் படைகளும் அமைக்கப்பட உள்ளது. தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில் 4 விடைத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது, என்றார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், திராவிடச்செல்வம், ராஜேந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.