கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 7-வது வீதியை சேர்ந்த சல்மான் கான் அவர்கள்...



கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 7-வது வீதியை சேர்ந்த முஜிப் (மீன் விற்கும்) அவர்களின் தங்கை மகனும், சகிலா அவர்களின் பேரனும் மற்றும் சர்மிளா அவர்களின் மகன் சல்மான் கான் அவர்கள் இன்று 12.02.2020 வபாத்தாகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று (12-02-2020) புதன்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது..

மீமிசலில் இருந்து திருப்புனவாசலுக்கு இருசக்கர வாகனத்தில் அரிசி ஏற்றிக்கொன்று சென்ற நிலையில் திருப்புனவாசல் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்துள்ளர்.    

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments