கலந்தாய்வில் தோ்வானோருக்கு பணி ஆணைகள் வழங்கல்



தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் ஆன்லைன் வழியாகத் தோ்வு செய்யப்பட்டோருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி பணி நியமன ஆணைகளை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த பிப். 9 மற்றும் 10ஆம் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 24 பேரும், வெளி மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டைக்குப் பணி நியமனம் பெற 92 பேரும் என மொத்தம் 116 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்கள் அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிலருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வழங்கினாா்.

அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி உடனிருந்தாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments