குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஆத்துப்பாலத்தில் நடந்து வரும் தொடர் இருப்பு போராட்டத்தில் இளம் தம்பதியினருக்கு இன்று வியாக்கிழமை திருமணம் நடந்தது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக கோவை ஆத்துப்பாலம் அருகே இரண்டாவது நாளாக தொடர் இருப்பு போராட்டம் நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் , மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலையில் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தொடர் இருப்பு போராட்டங்களின் இடையே கோவை குனியமுத்தூரை சேர்ந்த அப்துல்கலாம் கரும்புக்கடையைச் சேர்ந்த ரேஷ்மா ஷெரின் ஆகிய இளம் தம்பதியினருக்கு போராட்ட களத்திலேயே திருமணம் நடந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்த திருமணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.மேலும் புதுமணத்தம்பதிகளும் கையில் பதாகைகளை ஏந்தி கோசம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.