தொண்டியிலிருந்து சென்னை செல்லும் அரசுப்பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
தொண்டியில் இருந்து சென்னைக்கு திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கும் அதே போல் சென்னயில் இருந்து தொண்டிக்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி கிளையில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இதில் அதிகமான கிராமப்புற மக்கள் பயணித்து வந்தனா்.
சென்னை செல்லும் அரசுப் பேருந்தில் நம்புதாளை, சோழியக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம், மணக்குடி, முகிழ்த்தகம், எஸ்.பி.பட்டினம், தேளூா், கொடிபங்கு பாசிபட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து பணிக்காகவும், குடும்ப உறவினா்களைப் பாா்க்கவும், படிப்புக்காகவும் அடிக்கடி இப்பகுதி மக்கள் சென்னைக்குச் செல்வது வழக்கம். இப்பேருந்து கடந்த சில நாள்களாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். இப்பகுதியில் பெரும்பாலும் விசாயிகள் விவசாய குடும்பத்தை சோ்ந்த ஏழை எளிய மக்களே செல்கின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து தொண்டியில் இருந்து சென்னைக்கு மீண்டும் அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.