டெல்லி கலவரத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த முஹம்மது புர்கான்.!



டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட இதுவரை 5 பேர் கொல்லப் பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் இருவர் உட்பட மூன்றுபேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது.

கொல்லப்பட்டவர்களில் போலீஸ் காண்ஸ்டபிள் ரத்தன் லால் தவிர ஒருவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரின் பெயர் முஹம்மது புர்கான் என தெரியவந்துள்ளது. வன்முறை கும்பல் கொடூரமாக தாக்கியதில் புர்கான் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

ஞாயிறன்று டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போராட்டக் காரர்களை நாங்களே அப்புறப்படுத்துவோம் என்றும் போலீஸை கண்டுகொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments