கறம்பக்குடியில் முஸ்லிம்கள் 4-வது நாளாக போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் முஸ்லிம்கள் 4-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், கறம்பக்குடி புளியஞ்சோலை பள்ளிவாசல் திடலில் கடந்த 19-ந்தேதி தர்ணா போராட்டம் தொடங்கப்பட்டது. 4-வது நாளாக நேற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் விளக்கி பேசினர். இந்த போராட்டத்தில் தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைபித்தன் உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதற்கிடையே தொடர் போராட்டத்தை முடித்து கொள்ளும்படி வருவாய் துறை மற்றும் போலீசார் சார்பில், முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.