குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அம்மாபட்டிணத்தில் தொடர் இருப்பு போராட்டம்



மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் அம்மாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிலையம் அருகே 
CAA,NRC,NPR சட்டத்தை திரும்ப பெற வேண்டி  இன்று 17-02-2020 திங்கள்கிழமை காலை முதல் தொடர் இருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதில் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள், மாணவர்கள் என பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். எனவே சுற்றுவட்டார மக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments