கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு தமிழக ஜமாஅத்துல் உலமா சபை முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், கூறப்பட்டிருப்பதாவது, உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள எதிர்வரும் 15 நாட்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
அதனால் சில எச்சரிக்கைகளக் கடைபிடிக்குமாறு தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.
1. சளி, இருமல், தொண்டை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சீக்கிரமாக கிருமித்தொற்று ஏற்படக் கூடிய நபர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிரிக்கவும். அவசியமாக வெளியே சொல்ல நேர்ந்தால் முகக்காப்பு அணிந்து செல்லவும்.
2.மதரசாக்கள், அரபுக் கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கவும்.
3.அதிக நேரங்கள் நெருக்கமாக மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் ஆலிம்கள் இனிவரும் மூன்று ஜும் ஆ தொழுகைகளை 20 நிமிடங்களுக்குள் நிறைவு செய்திடவும்.
4.கைகுலுக்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதால் இந்த எச்சரிக்கை காலம் முடியும் வரை தவிர்த்துக் கொள்வது நல்லது.
5.பள்ளிவாசல்களில் கை, கால்கள் கழுவும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றின் தூய்மையில் அதிக கவனம் செலுத்தவும்.
தொழுகைக்கு முன்பும் பின்பும் கிருமி நாசினிகளை பயன்படுத்தவும்.
6.தங்கள் சொந்த தொப்பிகளையே தொழுகையாளிகள் பயன்படுத்தவும்.
7.புனித மிராஃஜ் இரவு நிகழ்ச்சிகளின் நேரத்தை சுருக்கிக் கொள்ளவும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.