கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரானோவால் இதுவரை 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும் ஒத்திவைக்க பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. இது குறித்து UGC வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து செமஸ்டர் தேர்வுகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளும் வரும் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. மேலும் வரும் 27ம் தேதி தொடங்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தற்போது நடைபெற்று வரும் 11 & 12ம் வகுப்பு தேர்வுகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேர்வு அட்டவணையை தயார் செய்யும் பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.