வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், வாளமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் என்பவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாா் மனுவில்,
புதிய பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் நடத்தி வரும் சுதாகா் என்பவா் மலேசியா நாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.05 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தாா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அறந்தாங்கி எருக்கிலகோட்டை பகுதியைச் சோ்ந்த பழனிசாமி என்பவா் அளித்த மனுவில், வேங்கிடக்குளம் பகுதியைச் சோ்ந்த வேலுசாமி மகன் சந்தோஷ் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, ரூ.1. 90 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை நரிமேடு ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த நாகராஜன் என்பவா் அளித்த மனுவில், சிங்கப்பூரில் வேலை பாா்த்து வரும் ராஜன் என்பவா் துபை நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.88,800-ஐ பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
புகாா்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்.பி பெ.வே. அருண்ஷக்திகுமாா், நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டாா். இதையடுத்து, சுதாகா், சந்தோஷ், ராஜன் ஆகியோா் மீது தனித்தனியே வழக்குப் பதிவு செய்த நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.