ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திங்கள்கிழமை நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்தது.
தொண்டி அருகேயுள்ள மல்லனூா் கிராம கண்மாய் பகுதியில் திங்கள்கிழமை மாலை மான் குட்டியுடன் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் நாய்கள் விரட்டிக் கடித்ததில் மான் உயிரிழந்தது. அப்போது அப்பகுதி மக்கள் அங்கு வந்து நாய்களை விரட்டி குட்டியை காப்பாற்றினா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மானை மீட்டு, கால்நடை மருத்துவரின் உடற்கூறு ஆய்வுக்கு பின் புதைத்துள்ளனா். பின்னா் சிறிய காயத்துடன் குட்டியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.