புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலபட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலபட்டிணம் கிளை சார்பில் 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு அரஃபா தெரு பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டதிற்க்கு TNTJ கோபாலப்பட்டிணம் கிளை தலைவர் அப்துல் மஜீது தலைமை வகித்தார். இந்த மஷுராவில் கிளை செயலாளர் செய்யது இபுராஹிம் பொருளாளர் அப்துல் ரசாக் துனை தலைவர் முகமது அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.CAA NRC NPR க்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை முஸ்லிம்களின் போராட்டம் ஓயாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.கிளையின் தாவா பணிகள் வீரியம்படுத்தவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
3.கோபாலப்பட்டிணத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் CAA,NRC,NPR போன்ற சட்டங்களுக்காக ஆவனம் கேட்க வந்தால் ஆவணங்கள் தரமாட்டோம் என்ற டோர் ஸ்டிக்கர் ஒட்டுவதாக முடிவு செய்யப்பட்டது.
4.எதிர்வரும் மார்ச்-18 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு கோபாலப்பட்டிணத்தில் உள்ள மக்களை அழைத்து செல்வது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
5.மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டத்திற்க்கு நமது ஊரில் இருந்து வாகனம் புதன்கிழமை காலை 7:30 மணிக்கு புறப்படும், வாகனம் புறப்படும் இடங்கள் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகிலும்,அவுலியா நகர் பள்ளிவாசல் அருகிலிருந்து புறப்படும் என ஆலோசனை செய்யப்பட்டது.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.