வண்ணாரப்பேட்டை ஷாஹீன் பாக் தற்காலிமாக ஒத்திவைப்பு.. போராட்டக்குழு அறிவிப்பு..!



கொரானா பரவைலை கருத்தில் கொண்டு நாட்டின் நலன் கருதி சென்னை வண்ணாரப்பேட்டை ஷாகின்பாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.


சென்னை வண்ணாரப்பேட்டை ஷாகின்பாக் போராட்டம் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆரம்பித்து இன்று வரை (33 நாட்களாக) பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு CAA,NRC,NPR-ஐ திரும்பப் பெறவேண்டும், தமிழக அரசு அவற்றை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தினை வீரியமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

ஆயினும் உலகெங்கிலும் தற்சமயம் பரவி வரும் கொரானா நோய் தொற்று தற்பொழுது இந்தியாவையும் வெகுவாக தாக்க தொடங்கியுள்ளது.

இந்த அசாதரண சூழலையும் நாட்டின் நன்மையையும் கருத்தில் கொண்டு நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் CAA,NRC,NPR-க்கு எதிரான தொடர் போராட்டத்தினை தற்காலிகமாக தள்ளி வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக முடிவு தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை வீரியமாக போராட்டத்தினை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது நாள் வரை போராட்ட களத்தில் வீரியமுடன் முன்னின்ற பெண்கள், ஆண்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் போராட்ட குழு நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

இவண்
ஒருங்கிணைப்பு குழு
சென்னை ஷாகின்பாக்
வண்ணாரப்பேட்டை
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments