கோபாலப்பட்டிணம் சகோதர சகோதரிகளே இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள். அங்கே வந்துடுச்சாம்,இங்கே வந்துடுச்சாம்.. அவருக்கு அப்படியாம்..அந்த வீட்டை சீல் வைத்து விட்டார்களாம்.. அந்த தெருவில் ஒருவருக்காம்..
போன்ற ஏராளமான வதந்தி செய்திகள்.. பஞ்சம் இல்லாமல் பரவி வருகிறது...
ஏற்கனவே மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தங்கள் பொழுது போக்குக்காக, எதையாவது பேச வேண்டும் என்பதற்காக.. இப்படியான வதந்தி பீதிகளை கிளப்பி சமூகத்தை மேலும் அச்சம் அடைய செய்யாதீர்.
செய்வது அறியாது நம் ஊர் மக்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.. நோயின் அச்சமும், குடும்ப பொருளாதார சூழ்நிலையும் நாளுக்கு நாள் பெரும் கவலையில் மக்களை மூழ்கடித்துள்ளது...
நமதூரில் எல்லா ஊர்களை போன்று வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வருகை புரிந்துள்ளவர்களை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் 14 நாட்கள் அவர்களை தனிமை படுத்தும் விதமாக அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளார்களே தவிர யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டும். எனவே தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
''நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.'' (அல்குர்ஆன் 2:42)
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.