கிருஷ்ணாஜிபட்டினத்தில் கடலில் தத்தளித்த புள்ளி மான் உயிருடன் மீட்பு! (படங்கள்)



கிருஷ்ணாஜிப்பட்டினம் கடலில் புள்ளி மான் உயிருடன் மீட்பு.

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் மீனவர்கள் இன்று (22.03.2020) கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருக்கையில் வழியில் கடலில் ஒரு புள்ளி மான் தத்தளித்ததை கண்டனர். உடனே தத்தளித்து வந்த புள்ளிமானை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

பின் கரைக்கு கொண்டு வந்த புள்ளி மானை கயிறு கொண்டு கட்டி வைத்து, பின் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டுச் சென்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் இந்த புள்ளிமானை கூட்டம் கூட்டமாக கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.






கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments