TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த அறிவிப்பு..!



உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவி வருகிறது. நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது.

இந்நிலையில் நோய் தொற்றினால் யார்?யார்? பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாத சமுதாய தொற்று எனும் மூன்றாவது நிலையை இந்தியா-தமிழகம் அடைந்துள்ளதாக தற்போது அரசு தரப்பில் அஞ்சப்படுகின்றது.

சமுதாய தொற்று உள்ள தற்போதைய சூழ்நிலையில் சிறிய அளவில் கூடுவதும் மக்களுக்கு ஆபத்தாக அமைந்து விடும் சூழல் உள்ளது.

அத்துடன், கடந்த 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து விட்டது.

இதனை தொடர்ந்து மக்கள், பள்ளிவாசல் அல்லது மர்க்கஸ்களுக்கு தொழவருவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உருவாகியுள்ளன.

அதனால் இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நமது பள்ளிகள், மர்க்கஸ்களில் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜும்ஆ தொழுகைக்கு பதிலாக வீடுகளில் லுஹர் தொழுமாறும், இயன்றவர்கள் வீட்டில் ஜமாஅத்தாக தொழுதுக் கொள்ளவும் என்று கேட்டுக் கொள்கின்றோம்..

வீட்டில் ஜமாஅத்தாக தொழுகும் முறைகள்:

இவ்வாறு செய்வதற்கு மார்க்கம் நமக்கு அனுமதியும் அளிக்கின்ற காரணத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

நிலைமை சீரடைந்தபின் சூழலுக்கேற்ப தலைமை சார்பாக உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்

இந்த அறிவிப்பின் படி TNTJ கோபாலப்பட்டிணம் கிளை பள்ளிவாசலிலும் நடைபெறும் என்று கிளை நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்...

தகவல்: 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம் கிளை, 
புதுக்கோட்டை மாவட்டம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments