புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் வர முடியாததால் நான்கு பேர் மட்டும் கலந்துகொண்டு இறுதி ஊர்வலத்தை நடத்தி உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் பாஞ்சாலி. மூதாட்டியான இவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
நேற்று இரவு முதல் இறுதிச் சடங்குகளை செய்யும் அவரது உறவினர்கள் வர வாய்ப்புள்ளதா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரது உறவினர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வர முடியவில்லை. இதனையடுத்து நான்கு பேர் மட்டும் கலந்துகொண்டு மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் . மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்யும் அவரது மகள் வர முடியாததால் மூதாட்டியின் பேரன் இறுதி சடங்குகளை செய்தது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.