மணமேல்குடி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி.!




மணமேல்குடி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த உசிலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகன் ஜெனோன் (வயது 25).


இவர் உசிலங்காட்டிலிருந்து மணமேல்குடிக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெனோன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெனோனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments