மீமிசல் அருகே தத்தணி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.!



மீமிசல் அருகே தத்தணி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீமிசல் அருகே தத்தணி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 40). அவரது மகள் கிருஷ்ணபிரியா (13) அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நாராயணனை நேற்று மது விற்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் மீமிசல் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருந்த கிருஷ்ணபிரியா திடீரென தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து கிருஷ்ணபிரியா உடலை, உறவினர்கள் ஊருக்கு கொண்டு வந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் கிருஷ்ணபிரியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் கிருஷ்ணபிரியாவின் உறவினர்கள் உடலை தரமாட்டோம் என்று கூறினர்.

இதையறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் சம்பவ இடத்திற்கு வந்து, கிருஷ்ணபிரியாவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கிருஷ்ணபிரியாவின் உடலை, அவரது உறவினர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கிருஷ்ணபிரியா உடலை பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபிரியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments