ரமலானில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன-கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாக கமிட்டி அறிக்கை.!



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.


இந்நிலையில் புனித ரமலான் மாதம் துவங்க இருப்பதால், வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாக கமிட்டி சார்பில் கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் ரமலானில் கடைபிடிக்க வேண்டிய அவசியமான நடைமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது :

◆ தராவீஹ் தொழுகையினை அவரவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும்.
  • ரமலான் நோன்பு கஞ்சி பள்ளிவாசலில் தயாரித்து வினியோகிப்பது இல்லை.
  • பள்ளிவாசலில் சஹர் உணவு வழங்கப்படாது.
  • பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி இல்லை.
  • உணவு பொருட்களை வீட்டிலேயே தயாரித்து சுகாதாரம் அனுசரிக்க வேண்டும்.
  • தனிப்பட்ட முறையில் கூட்டாக கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்வதையும், கூட்டாக தராவீஹ் தொழுவதையும், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துவதையும், சஹர் சாப்பாட்டிற்காக ஓன்று கூடுவதையும் ஊர் நலன் கருதி தவிர்த்திட வேண்டுகிறோம்.

மேற்கண்ட நடைமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்றி சமுதாய நலன் காத்து ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேலும் மேற்கண்ட நடைமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாக கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

தகவல்:
முஸ்லிம் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments