தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளையின் முக்கிய அறிவிப்பு.!



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.


இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால்
தமிழக அரசின் மறு உத்தரவு வரும்வரை ரமலான் (நோன்பு) மாதத்தில்
  • பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் (இஃப்தார் ) ஏற்பாடு நடைபெறாது.
  • ரமலான் இரவுத் தொழுகை நடைபெறாது.
  • இரவு சிறப்பு பயான் நடைபெறாது.
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளிவாசல் (மர்கஸ்ஸில்) நோன்பு நாட்களில் நபிவழி அடிப்படையில் ஸஹர் நேரத்தை அறிவிப்பதற்காக பாங்கு சொல்லப்படும், (இஃப்தார்) நோன்பு திறக்கும் நேரத்தை அறிப்பதற்காக பாங்கு சொல்லப்படும் அந்நேரத்தில் உங்கள் வீடுகளில் நோன்பு வைத்துக் கொள்ளும்மாறும், நோன்பு திறந்துகொள்ளும்மாறும் கேட்டுக் கொள்கிறோம்.

உங்கள் வீடுகளிலே இரவு தொழுகை தொழுது கொள்ளுங்கள்...

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.
9976054882, 9715503699
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments