கொரோனா பாதிப்பை மதத்தோடு ஒப்பிட்டு குழப்பம் ஏற்படுத்தக்கூடாது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், சுயநலமின்றி, தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உலகைத் தலைகீழாக மாற்றியுள்ள கொரோனா வைரசுக்கு எதிராக வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையும் நேரமிது என குறிப்பிட்டுள்ளார். மேலும் நமது அண்ண்டை வீட்டார், முதியவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மனிதம், ஆன்மிகம் ஆகியவற்றின் அழகை செயலில் கொண்டு வரும் நேரமிது என கூறியுள்ள அவர், கடவுள் நம் மனதிற்கு உள்ளே இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மதத்தின் அடிப்படையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசின் அறிவுரைகளை கேட்டு மக்கள் அனைவரும் தனிமையில் இருக்க வேண்டும் எனக்கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், வதந்திகளை பரப்பி மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.