சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வேலையிழந்து உணவின்றி தவித்த 30-க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கு ரியாத் மத்திய மண்டல தமுமுக சார்பாக மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட அவசரநிலை காரணத்தால் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வேலையிழந்து உணவின்றி தவித்த அனைத்து சமுதாய மக்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை ரியாத் மண்டல தமுமுக சார்பாக 20-04-2020 அன்று பத்தாஹ் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரியாத் மத்திய மண்டல அலுவலகத்தில் வைத்து சுமார் 85 ரியால் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்பும் சமைக்க வாய்ப்பில்லாத சகோதர்களுக்கு சிறிய அளவிலான உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
இதில் பயன் பெற்றவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு உணர்ச்சிப்பூர்வமாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதற்காக உழைத்த மண்டல நிர்வாகிகள் மற்றும் பத்தாஹ் கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் இதற்காக பொருளாதார உதவி வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் தங்கள் பகுதிகளில் வாழும் இதுபோன்ற பாதிப்புக்குள்ளான மக்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
மேலும் ஏதேனும் உதவி தேவையெனில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0532883605
தகவல்:-
தமிழ் தஃவா-தமுமுக & மமக,
ஊடக பிரிவு,
மத்திய மண்டலம்,
ரியாத், சவூதிஅரேபியா.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.