மீமிசல் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது.!



மீமிசல் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தியவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது மற்றும் போலீசார் மீமிசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில், டிராக்டரில் மணல் கடத்தி வந்தது அப்பகுதியை சேர்ந்த முருகேசன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகேசனை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments