R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 65 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்.!



R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 65 ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினா்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள  R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக பொருளாதாரம் திரட்டப்பட்டு 144 தடை உத்தரவு காரணமாக R.புதுப்பட்டினம் மற்றும் மீமிசல் வண்ணான் குட்டை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 65 ஏழை குடும்பங்களுக்கு இந்த ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்காக ஒரு மாதத்திற்குண்டான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த மளிகை பொருட்களை அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் வினியோகம் செய்தனர்.

தகவல்:  கலந்தர் பாட்சா, மன்றத் தலைவர், R.புதுப்பட்டினம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments