புதுக்கோட்டையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும், அவ்வாறு அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர், காய்கறி வியாபாரிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், மருந்தகங்கள், ஓட்டல் நடத்துபவர்கள், வாகனம் ஓட்டுவோர், சாலையோர வியாபாரிகள், ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், பொதுமக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். தவறினால் பொது சுகாதார சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.