புதுக்கோட்டை அருகே முன்விரோதத்தில் முதியவர் அடித்துக்கொலை 2 பேர் கைது.!



புதுக்கோட்டை அருகே முன்விரோதத்தில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடப்பன்வயல் பக்கம் அண்ணாநகர் வடக்கு விரிவாக்கத்தை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 70). இவரது வீட்டின் அருகே நேற்று காலை சம்சுதீன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்சுதீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், சம்சுதீனின் நண்பர் சரவணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (45) என்பவருக்கும் விறகு வெட்டுதல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததும், இதில் சரவணனுக்கு ஆதரவாக சம்சுதீன் செயல்பட்டது தெரிந்தது. இதனால் செல்வக்குமார் ஆத்திரமடைந்தார். அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் செல்வக்குமார் தனது நண்பர் அஷ்ரப் அலியை(31) தூண்டிவிட்டு அடித்ததில் காயம் ஏற்பட்டதில் சம்சுதீன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அஷ்ரப் அலி, செல்வக்குமார் ஆகிய 2 பேரை திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments