தமிழகத்தில் புதுக்கோட்டை உட்பட 28 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்.!



தமிழகத்தில் 28 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


அதன்படி நெல்லை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் எஸ்.சுபாதேவி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.இளங்கோவன், மதுரை மகளிர் கோர்ட்டு நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி என்.உமா மகேஸ்வரி, கரூர் மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், திருப்பூர் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஜே.ஏ.கோகிலா, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சென்னை 18-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆர்.சத்தியா, புதுக்கோட்டை மகளிர் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி கே.கருணாநிதி, திருச்சி நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ராஜலட்சுமி, சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments