நாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்படுகின்றன. இதுதொடர்பான, உத்தரவுகளை அந்த மாநில அரசு அமைப்புகள் பிறப்பித்துக் கொள்ளலாம்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிற பகுதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளை நிறைவடைகிறது. இந்த நிலையில், 5-ஆம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஜூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், மால்கள், ஹோட்டல் போன்ற பிற தொழில்கள் ஆகியவற்றையும் ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஜூலை மாதத்தில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக் கூடங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றைத் திறப்பது பற்றி நிலைமையைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மதம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் விஷயத்திலும் நிலைமையைப் பொருத்து பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.
கரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.