புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளர் துறை அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
புதுக்கோட்டை மாவட்டம், இராஜகோபாலபுரத்தில் இதுவரை இயங்கி வந்த தொழிலாளர் துறை அலுவலகம் சமீபத்தில் தமிழக முதல்வரால் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடமான புதுக்கோட்டை, திருச்சி சாலையில் ஐடிஐ வளாகம், திருகோகர்ணம் 622002, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பின்புறம் உள்ள அலுவலகத்தில் இன்று 1.6.2020 முதல் இயங்க உள்ளது.
ஆகையால் தொழிலாளர்துறை சம்பந்தமாக இயங்கும் தொழிலாளர் துணை ஆய்வர் அலுவலகம், முத்திரை ஆய்வர் அலுவலகம், தொழிலாளர் உதவி ஆய்வர் 1ம் சரகம் அலுவலகம் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் 2ம் சரகம் அலுவலகம் மற்றும் மார்த்தாண்டபுரம், முதல்வீதியில் இயங்கிவந்த தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மேற்குறிப்பிடப்பட்ட புதிய முகவரியில் இன்று 1.6.2020 முதல் செயல்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.