சவுதி அரேபியாவில் இறந்தவர் உடலை ஊருக்கு கொண்டுவர கலெக்டர் அலுவலகத்தில் மனு.!



ராமநாதபுரத்தை அடுத்துள்ள சத்திரக்குடி அருகே உள்ளது கீழக்கோட்டை. இந்த ஊரைச் சேர்ந்த சோலை என்பவரின் மகன் சேகரன்(வயது55). இவர் சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டிட தொழில் செய்து வந்தார்.


கடந்த 20 வருடங்களாக அங்கு பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக உடல்நி்லை பாதிக்கப்பட்டு இருந்தாராம். கொரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டார். 

இதுகுறித்து அங்கு உடன் வேலை பார்ப்பவர்கள் சேகரனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த அவரின் மனைவி சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

சவுதிஅரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேகரனின் மனைவி சரஸ்வதி மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து மனு கொடுத்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments