வங்க கடலில் உருவான உம்பன் புயல் தீவிரமான நிலையில், புதுக்கோட்டையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இரவு 8.30 மணியளவில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் ஒரே சீராக ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியது.
இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் உக்கிரம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த மழையில் பூமி குளிர்ந்தது. இதேபோல் மீமிசல், கோபாலப்பட்டிணம், கோட்டைபட்டினம், மணமேல்குடி, இலுப்பூர், வீரப்பட்டி, அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, வயலோகம், முக்கண்ணாமலைப்பட்டி, ஆரியூர், மாங்குடி, பரம்பூர், கடம்பராயன்பட்டி, பணம்பட்டி, பெருஞ்சுனை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதேபோல் அறந்தாங்கி, கீரனூர், பொன்னமராவதி, விராலிமலை, ஆலங்குடி உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.